Archive for November, 2009
தருசின்னம் பெற்ற சாரணர்களுக்கான ஒன்றுகூடல் (Gill wel Re union)
இலங்கை சாரணர் சங்கத்தால் தரு சின்னம் பெற்ற சாரணர் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் (Gill wel Re union) இவ்வருடம் திருக்கோணமலையில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 250 அகில இலங்கைச் சாரணர் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்று 07.11.2009 மாலை 4.30 மணிக்கு கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் 2 பேடன் பவுல் விருதுகளும், 4 தருசின்னம் சூட்டும் நிகழ்வும் இனிதே நடந்தேறியது.
எமது இம்பீசா திரிசாரணர்களில் திரு.ரா.புஸ்பராகவன், திரு.டொ.பிரசாந் ஆகியோருக்கு பேடன் பவுல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் கலாச்சார நிகழ்வுகளும் இனிதே நடந்தேறியது.
பின்னர் இம்பீசாவின் அணுசரனையில் இராபோசன நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் எமது மாவட்ட மூத்த சாரணர்களான திரு.வி.தங்கராஜா ஐயா அவர்கட்கும், திரு.ஆரோக்கியநாதன் ஐயா அவர்களுக்கும், திரு.ஆர்.எம்.ஜீ.தங்கராஜா ஐயா அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவம் செலுத்தப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவேறியது.


