Archive for September, 2008
சிறுவர்தினம் முதியோர்தினம்
திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சாணர் குழுவின் (2வது திருமலை சாரணர் குழு) ஏற்பாட்டில் அனைத்துலக சிறுவர் தின விழா இன்று புதன்கிழமை (01.10.2008) காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.
2008 வருடாந்த ரலே நிகழ்வு
திருக்கோணமலையில் 2008ம் ஆண்டுக்கான வருடாந்த ரலே நிகழ்வு 11-09-2008 அன்று 3வது மயிற்கல் சந்தியில் அமைந்துள்ள சனசமூக காணிப்பகுதியில் ஆரம்பமானது. இப்பிரதேச சூழலானது சாரண பாசறை அமைப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இம்பீசா திரிசாரணர்களின் 7 ம் ஆண்டு நிறைவு விழா
திருக்கோணமலை இம்பீசா திரிசாரணர்களின் 7ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சாரணர் முகாம் இன்று காலை 9.00 மணியளவில் இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதலாவதாக மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது. 
7 ஆம் ஆண்டு நிறைவு விழா
எமது திரிசாரணர் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருனத்தில் இதனை ஒரு கெளரவிப்பு விழாவாகவும், அமரர் கலாபூசணம் த.சித்தி அமரசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கும் நூல் வெளியீட்டு விழாவாகவும் இம்பீசா திரிசாரணர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது. இந்நிகழ்வானது எதிர்வரும் 07-09-2008 அன்று திருக்கோணமலை தி.இ.கி.ச.கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அத்துடன் எமது மாவட்ட அனைத்து சாரணர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
