Archive for April, 2008
இம்பீசா திரிசாரணர்களின் பயிற்சிப்பாசறை
நேற்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இம்பீசா திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் திரிசாரணர்களுக்கான வதிவிட பயிற்சி்ப்பாசறை புனித சூசையப்பர் கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. இவ் வதிவிடப் பயிற்சிப் பாசறையானது இம்பீசா திரிசாரணர்குழுவில் புதிதாக இணைந்த மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டது. இப்பாசறையானது தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டியில் திரிசாரணர் அவத்தை 1
கண்டிமாவட்டத்தில் கடந்த 1ம் 2ம் திகதிகளில் திரிசாரணர்களுக்கான அவத்தை 1 பயிற்சிபாசறை நடைபெற்றது. இந்தப் பாசறையில் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த த.சதீசன், சோ.மோகனதீபன், இ.சத்தியராஜ் ஆகிய சாரணதலைவர்கள் பங்குபற்றினார்கள். அதுமட்டுமல்லாது இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலிருந்து 30 ஆண்டுகளுக்குப்பி்ன் இந்நிகழ்வில் எமது மாவட்ட திரிசாரணர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது..
